தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிய உச்சமாக, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 6 பேர் உள்பட 36 ஆயிரத்து 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 425 பேர் ஆண்கள் என்றும், 15 ஆயிரத்து 759 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 5 ஆயிரத்து 913 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் 3 ஆயிரத்து 243 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 226 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 796 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

திருவள்ளூரில் ஆயிரத்து 667 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 656 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 467 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Exit mobile version