தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 25 பேர் உள்பட 29 ஆயிரத்து 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 62ஆயிரத்து 181 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 983 பேர் ஆண்கள் என்றும், 12 ஆயிரத்து 289 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 7 ஆயிரத்து 466 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 2 ஆயிரத்து 650 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 419 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 204 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் ஆயிரத்து 24 பேரும், கன்னியாகுமரியில் 995 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 298 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Exit mobile version