முதலமைச்சருடன் தமிழக அரசு தலைமை காஜி சந்திப்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக அரசு தலைமை காஜி உள்ளிட்ட குழுவினர் சந்தித்துப் பேசினர். சென்னை பசுமைவழிச் சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில், தமிழக அரசு தலைமை காஜி சலாவுத்தீன் முஹமத் அய்யூப் சாஹீப் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளத் தாவூத் மியாகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தாவூத் மியாகான், CAA தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக் கூறினார்.

Exit mobile version