#BREAKINGNEWS|| இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி!

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சமூக தீமையான தீண்டாமையை அழிக்க பாடுபட்டவரும், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடிய அவரது தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன் என கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version