புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்தும் முடிவெடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version