தமிழ்நாட்டில் ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படாது

தமிழ்நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தற்போது 4 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறினார். மே மாதத்திற்கான ஒரு லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் வரவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படாது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version