கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தமிழிசை பாராட்டு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் துரிதமாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், புயல் எச்சரிக்கை வந்த காலத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரை துச்சமென மதித்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்த பேரிடர் மேலாண்மை குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version