ஜூன் 28 ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது

தமிழக சட்டசபை வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 28ம் தேதி முதல் நாளில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படுகிறது. இதையடுத்து நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். அதன்படி பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் தங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது பதிலளிப்பார்கள். சட்டசபை கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version