தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் தீவிரம் – சத்ய பிரதா சாகு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வருகிற 25ம் தேதி துணை ராணுவப்படை தமிழ்நாடு வர இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பாக, கடந்த 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வருகிற 25ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படை தமிழ்நாடு வர இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version