தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார்.

வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும்,

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ஆம் தேதியே கடைசி நாள் என்றும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா அறிவித்தார்.

 

தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

Exit mobile version