தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும்;  நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில், அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனி அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

Exit mobile version