தமிழகம், புதுச்சேரியில் லேசான, மிதமான மழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக அனல்காற்று வீசும் என்றும் , சென்னையை பொறுத்தவரை 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டர் மழையும், வேலூரில் 5 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Exit mobile version