அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது உறுதியானது. இதனையடுத்து கூட்டணி ஒப்பந்தத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version