திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 18 தமிழர்கள் உட்பட 24 பேர் கைது

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 18 பேரை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக பாக்ரா பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து , சின்னக் கொட்டிகல்லு பகுதியில் தனியாக நின்றிருந்த இரு வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 18 பேர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version