ஆந்திர வனப்பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 9 பேர் கைது

ஆந்திர வனப்பகுதியிலிருந்து, செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 108 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை வனப்பகுதிக்குள் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சில செம்மரக் கூலிகள், செம்மரங்களை கடத்துவதற்காக வெட்டி தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இதைப் பார்த்த காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயற்சித்த போது, 11 பேர் தப்பியோடினர். மேலும் 9 பேரை துரத்தி பிடித்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 108 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version