ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக சென்ற 14 பேர் கைது

திருவண்ணாமலை அருகே ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக சென்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்க முயன்ற போது நிற்காமல் சென்றது. சந்தேகத்தில் வாகனத்தை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரித்ததில் அனைவரும் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் பணிக்காக செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து 14 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து செம்மரம் வெட்ட பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் கைப்பற்றினர். அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, செம்மரம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version