கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவு பகுதியில், தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து பணி மேற்கொண்ட இலங்கை கடற்படையினர், அவர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும், மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

நேற்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version