கவனத்தை திசை திருப்பி பட்ட பகலில் "கொள்ளை"

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையில் பட்ட பகலில் கார் ஓட்டுனரை மர்ம கும்பல் திசை திருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுபெருங்களத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவர், நகையை பீர்க்கன்காரணை காந்தி சாலையில் உள்ள வங்கியில் அடகு வைத்துவிட்டு பணத்தை காரில் வைத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் சிறிது பணத்தை கீழே போட்டுவிட்டு முருகேசனின் கவனத்தை திசைதிருப்பியுள்ளனர். பின்னர், அவருக்கு தெரியாமல் காரில் இருந்த பணம் மற்றும் அரை சவரன் நகையை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version