அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவது விஷாலுக்கு நல்லதல்ல – கடம்பூர் ராஜூ

அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவது விஷாலுக்கு நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி 8-ம் நாள் நிகழ்ச்சியாக, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எந்த அடிப்படையும் தெரியாமல் நடிகர் விஷால் பேசி வருவதாக கூறிய அவர், தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் கூட வழிமுறைகள் தெரியாமல் ஆர்.கே.நகரில் பெற்ற அனுபவத்தை மறந்து பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இது விஷாலுக்கு நல்லதல்ல என அவர் எச்சரித்துள்ளார்.

 

Exit mobile version