இளம் பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் நட்பாக பேசி பாலியல் தொந்தரவு செய்த கும்பல்

கோவையில் இளம் பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் நட்பாக பேசி பாலியல் தொந்தரவு செய்து மற்றும் பணம், நகை பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று  சில மாதங்களாக வசதியான குடும்ப இளம்பெண்களிடம் ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழகி, அவர்களை காரில் அழைத்து சென்று, ஆபாசமாக படம் எடுப்பதாக பாலியல் புகார்கள் அதிகரித்தன. மேலும் சில பெண்களிடம் இவ்வாறு பழகி பணம், நகைகளை பறிக்கப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சதீஷ் , சபரிராஜன் மற்றும் வசந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version