தாலிபன்கள் வன்முறை வெறியாட்டம் – 17 பேர் உயிரிழப்பு

ஆப்கனில் பாஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய செருக்கில் தாலிபன்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆப்கன் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பாஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய செருக்கில் தாலிபன்கள் உற்சாக மிகுதியில் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிலையில், அடிவாரப் பகுதிகயில் இருந்து, மக்கள் வசிக்கும் மலைக் குன்று பகுதியின் மீது நடந்த இந்த வன்முறை வெறியாட்டத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தாலிபன் செய்தித் தொடர்பாளர் முஜாகீத், துப்பாக்கி குண்டுகள் பொதுமக்களை காயப்படுத்த நேர்ந்தால், அவற்றை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.

Exit mobile version