தாலிபன்கள் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்

தாலிபன்கள் அவர்களது ஆதரவாளர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் சட்டங்களின்படி, தாலிபன் அமைப்பு பயங்கரமான தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளின்படி தாலிபன்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. தாலிபன்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத வகையில் தாலிபன்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டோரின் கணக்குகளை முடக்கியது. இந்நிலையில் பேஸ்புக்கை தொடர்ந்து தாலிபன்கள், அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Exit mobile version