200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம்

எடப்பாடி அருகே 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள மைதானத்தில் நடந்த எருதாட்ட விழாவிற்காக காளைகள் அலங்காரம் செய்யப்பட்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற இந்த எருதாட்டத்தில் சீறி பாய்ந்த காளைகளை இளைஞர்கள் பிடித்து இழுத்து நிறுத்தினர். இதில் கலந்து கொண்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும் காளைகளை பிடித்து நிறுத்திய இளைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்ட எருதாட்டத்தை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.

Exit mobile version