உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான இந்திரா பானர்ஜி, சதானந்தா, நாகேஸ்வரராவ், போபண்ணா, ஹேமந்த் குப்தா, ஹிரிகேஷ் ராவ் ஆகிய ஆறு நீதிபதிகளும் ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிலர் முக கவசம் அணிந்தபடி நீதிமன்ற அலுவல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கவலை தெரிவித்த நீதிபதி சந்திரசூட், தலைமை நீதிபதி உடனடியாக தலையிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அலுவலர்களின் மருத்துவ பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Exit mobile version