தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தற்கொலை செய்யும் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒழுங்காக பணிக்கு சென்றும், பணிக்கு வரவில்லை என்று செயல் அலுவலர் வருகை பதிவேட்டில் குறிப்பிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா என்பவர், தூய்மைப்பணியாளர்களுக்கு பணிச் சுமையை அதிகரித்து தருவதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் பணியாளர்களை மிரட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சு வார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

மேலும், செயல் அலுவலர் உஷா மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version