எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் பரபரப்பு!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் கறுப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. பல மணிநேரமாக சூட்கேஸ் கிடந்ததால் சந்தேகமடைந்த பயணிகள், அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயின் உதவியுடன் நடத்திய சோதனையில், அந்த பெட்டியில் விபரீதமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. பயணிகள் யாரேனும் சூட்கேஸை தவற விட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தார்.

Exit mobile version