குடியரசு தின விழாவை முன்னிட்டு வியப்பூட்டும் மணல் சிற்பம்

ஒடிசாவில், குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் வியப்பூட்டும் வகையில் அமைந்தது. ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குடியரசு தினத்தை போற்றும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார். 70வது குடியரசு தினத்தை சுட்டிக்காட்டும் வகையில், மூவண்ண கொடியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் வடிவமைத்துள்ளார். குடியரசு தின விழா மணல் சிற்பம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version