கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி

தாங்கள் எடுத்த புகைப்படங்களால் தான் சரவணன் சூர்யாவாக மாறிய அற்புதத் தருணம் நிகழ்ந்தது என்று கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், இது ‘பேரிடர் காலம் ‘ என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இல்லை என்ற உண்மை, மனமெங்கும் அதிர்வையும், வலியையும் உண்டாக்குவதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

ஏற்க முடியாத தங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுவதாக சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம் , தங்களது கேமராவில் இருந்து வெளிப்பட்டதன் மூலம்தான் தமது எதிர்காலம் பிரகாசமானதாக சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட சூர்யாவின் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில் கேமிரா மேனாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version