விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி வழக்கு – சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி மனு தாக்கல்!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மீதான நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுமாறு நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன், ஆகியோர், நிலம் வாங்கி தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் சூரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இருவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ரமேஷ் குடவாலா ஓய்வு பெற்ற டிஜிபி என்பதால் காவல்துறையினரின் விசாரணை நேர்மையாக இருக்காது என சூரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version