வயலின் வாசித்த நிலையில் அறுவை சிகிச்சை

லண்டனில் பெண் ஒருவர் வயலின் வாசித்த நிலையில், அவருக்கு மூளையில் இருந்த கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

லண்டனை சேர்ந்த வயலின் கலைஞர் டக்மர் டர்னர் என்பவருக்கு, மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதை அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்l நிலையில், லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் டக்மர் அனுமதிக்கப்பட்டார். அவர் வயலின் வாசித்துக் கொண்டிருக்க மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version