அபிநந்தனை பெருமைப்படுத்திய குஜராத்தின் சூரத் ஜவுளி உற்பத்தியாளர்கள்

பாகிஸ்தானிடம் சிக்கி, பத்திரமாக தாயகம் திரும்பிய இந்திய விமான படை அதிகாரி அபிநந்தனுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில், அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் அபிநந்தனின் உருவப்படம் இடம்பெற்ற சேலைகளை தயாரித்துள்ளனர்.

முன்னதாக, புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ உடையிலான சேலையை உற்பத்தியாளர்கள் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version