சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் தேனியில் உள்ள சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என 4 நாட்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சுருளி அருவியில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சில நாட்களாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆர்பரிக்கும் அருவியில் மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குளித்து மகிழ்ந்தனர். அருவியை சுற்றியுள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version