சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் 40 நாட்கள் தொடர் விசாரணை நடத்தி வந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தி நகரம் அமைந்துள்ள கோரக்பூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பதற்றமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version