அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து விவாதிப்பதற்காக சாதுக்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட சமரச குழுவை அமைத்தது.

இந்தநிலையில், அயோத்தியில் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் பங்கேற்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version