அயோத்தியா வழக்கை நேரலை செய்யக்கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அயோத்தியா வழக்கை நேரலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

அயோத்தியா வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை நேரலை செய்ய வேண்டுமென கோவிந்த சார்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அயோத்தியா வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதியின் அமர்வுக்கு இந்த வழக்கின் விசாரணையையும் பரிந்துரை செய்தார்.

Exit mobile version