சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சரவண பவன் மேலாளர் மகள் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடந்த 2001ம் ஆண்டு கொலை செய்ததாக ராஜகோபால் உட்பட 9 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் ராஜகோபால் உட்பட 9 பேருக்கு கடந்த 2009ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version