அயோத்தி வழக்கு விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

அயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி பா.ஜக முன்னாள் தலைவர் கோவிந்தாச்சார்யா உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கட்டுப்பாடுகளுடன் நேரலை செய்யவும், அனைத்து விசாரணைகளையும், அல்லாமல் முக்கிய வழக்கு விசாரணைகளை மட்டும் நேரலையாக ஒளிபரப்பவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேசமயம் வழக்கு விசாரணையை நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தொடர்பாக அறிக்கையை அளிக்குமாறு உச்சநீதி மன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version