அதிமுக கூட்டணி வெற்றிக்கு சிறுபான்மையினர் ஆதரவளிக்க வேண்டும்

அதிமுக கூட்டணி வெற்றிக்கு சிறுபான்மையினர் ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக் கொண்டார். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டியில், அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், அதிமுக கூட்டணி வெற்றிபெறுவதால் சிறுபான்மையினருக்கு எள்ளளவும் பிரச்சனை வராது என திட்டவட்டமாக கூறினார். 

Exit mobile version