மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு : அனைத்து போயர் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போயர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் தமிழ்நாடு போயர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, போயர், ஒட்டர் சமுதாயத்தையும் ஒன்றிணைத்து போயர் என ஒரே சமுதாயமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

Exit mobile version