கோடை சீசன் தொடங்கியதையடுத்து சாலை சீரமைப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

கோடை சீசன் தொடங்கியுள்ளதையடுத்து நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை சீரமைப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரமாக திகழ்வதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் சுலபமாக செல்வதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் சாலைகள் சீரமைப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. முதல் கட்டமாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை சாலை விரிவாக்க பணி நிறைவடைந்ததையடுத்து, 2ம் கட்டமாக குன்னூர் முதல் கூடலூர் வரையிலான சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது

Exit mobile version