கோடைக்காலத்தையொட்டி சூடுபிடித்துள்ள மண்பானைகள் விற்பனை

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூரில் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கான கோடை வெப்ப நிலை இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மண் பானைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மண்பாண்டங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிநீர் ஜாடி, டம்ளர், குவளை போன்றவைகள் காலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டு புதிய வரவாக சந்தைக்கு கொண்டுவரப்பட்ட மண்பானைகள் அதிகளவில் விற்பனையாவதால் வியாபரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version