புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து 14, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மன்னர் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி வகுப்புகளை துவங்கியுள்ளது.

இந்த பயிற்சியில் பேட்டிங், கீப்பங் மற்றும் பீல்டிங்கின் அடிப்படைகள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 15 நாட்கள் அளிக்கப்படவுள்ள இந்த பயிற்சிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சியாளரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுப்பியுள்ளது. மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த பயிற்சி உந்துசக்தியாக விளங்கும் என்று பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.

Exit mobile version