கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் சந்தைகளுக்கு வரத் துவங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில், கரும்பு வரத்து தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கரும்புகள், கட்டுக்கட்டாக சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் கரும்பு வரத்து அதிகளவில் வர தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 கரும்புகள் கொண்ட ஒரு கரும்பு கட்டின் விலை 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த வருடம் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version