நிலுவைத் தொகையை வழங்கிய தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் பாராட்டு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நிலுவைத் தொகையை வழங்கிய தமிழக அரசுக்கு கரும்பு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பில் தமிழக அரசால் இயங்கும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஆலையால், 3, 500 க்குமேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த 8 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை  வங்கி மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version