நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்

நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

இதனையடுத்து, புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version