அண்ணாநகரில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை அண்ணாநகரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் காலை 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எப்பொழுதும் பரப்பாக காணப்படும் அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் சாலையின் நடுவே 15 அடி ஆழம், 10 அடி அகலத்திற்கு ஏற்பட்ட இந்தப் பள்ளத்தால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து வந்து நெரிசலை சரி செய்தனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்தனர்.

Exit mobile version