காரை வெளியில் எடுத்த போது திடீரென பற்றி எரிந்த தீ

தூத்துக்குடி அருகே கார் நிறுத்தத்திலிருந்து காரை வெளியில் எடுத்த போது திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டாள் தெருவை சார்ந்தவர் தேவராஜ். இவர் தனது காரை வீட்டில் நிறுத்த இடமின்றி தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்றில் மாத வாடகை கொடுத்து நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வெளியே எடுக்க முயன்ற போது கார் திடிரென தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால், தீ அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version