திருமணத்திற்கு சென்ற இளைஞருக்கு திடீர் யோகம் !

சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமாருக்கும், குருமூர்த்தி என்பவரது மகளுக்கும் இடையே திருமணம் நிச்சியிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடைபெறும் வேளையில் மணமகன் ஜெயக்குமார் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த மணமகள் வீட்டார் உடனடியாக வேறு மாப்பிள்ளையை பார்த்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். தாலிக்கட்டும் நேரத்தில் நீதித்துறையில் பணியாற்றும் மாப்பிள்ளை தலைமறைவான சம்பவம் திருமண மண்டபத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version