கொடைக்கானலில் பெய்த திடீர் மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களாக மழை இல்லாமல் விவசாயிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வந்தனர். பனியின் தாக்கம் அதிகம் இருந்தது. மேலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்துகளும் ஏற்பட்டன. இந்த நிலையில் பிற்பகலில் சுமார் 1 மணி நேரமாக திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version