பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனங்களில் திடீர் சோதனை

திருநெல்வேலியில் திமுக மாநில வர்த்தக அணி துணைத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அய்யாத்துரை பாண்டியன் என்பவரின் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மோற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை பாண்டியன், பிரபல தொழிலதிபரான இவர் திமுகவின் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு சங்கரன்கோவிலில் கல்வி நிறுவனங்களும், திருநெல்வேலியில் உணவகமும் உள்ளன. இந்த நிலையில் அய்யாத்துரை பாண்டியனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Exit mobile version